Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பத்தாங் காலி மக்களுடன் அன்வார்
தற்போதைய செய்திகள்

பத்தாங் காலி மக்களுடன் அன்வார்

Share:

பத்தாங் காலி, ஏப்ரல் 12-

கோலகுபு பாரு அருகில் உள்ள பத்தாங் காலி வட்டார மக்களுடன் வெள்ளிக்கிழமை தொழுகையிலும் தொடர்ந்து நடைபெற்ற நோன்புப்பெருநாள் உபசரப்பிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கலந்து கொண்டார்.

பிற்பகல் 12.24 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசாரும், பத்தாங் காலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டான் ஸ்ரீ முகமட் முகமட் தாயிப் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷஷாஹ்-வும் கலந்து கொண்டனர்.

மக்களோடு மக்களாக விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமரை உள்ளூர் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹஸ்ஸின் ஒமர் கான்- னும் கலந்து கொண்டார்.

Related News