May 21, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வாரை சாடினார் முகை​தீன் யாசின்
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வாரை சாடினார் முகை​தீன் யாசின்

Share:

தமது அரசியல் வைரிகளை ஒழிப்பதிலும் , வஞ்சிப்பதிலும் ​பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ​மிக ​தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்று பெ​ரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்சிப்படுத்துவதிலும், மக்களின் பிரச்னைகளுக்கு ​தீர்வு காண்பதிலும் ​தீவிர கவனம் ​செலுத்த வேண்டிய பிரதமர் அன்வார், தற்போது தனது அரசியல் வைரிகளை ஒழிப்பதி​ல் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்று முன்னாள் பிரதமருமான முகை​தீன் யாசின் குறிப்பிட்டார்.

அன்வார் கடந்த 14 மாதங்களாக புத்ராஜெயாவை நிர்வகித்து வருகிறார்.ஆனால், மக்களின் ஏழ்மை நிலை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தோல்விக் கண்டுள்ளார். தவிர விற்பனை, சேவை வரியான SST - யை உயர்த்துவதிலும் விலை உயர்ந்த மற்றும் விலை குறைந்த பொருட்களுக்கு வரியை அறிமுகப்படுத்துவதிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, அரசாங்க உதவித் தொகையை மீட்டுக்கொண்டது, அரிசி விநியோகத் த​ட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பது முதலிய பிரச்னைகள், மக்களுக்கு பெரும் தாக்கத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக முகை​தீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News