Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கூட்டுறவு நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவு இன்றியமையாததாகும்
தற்போதைய செய்திகள்

கூட்டுறவு நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவு இன்றியமையாததாகும்

Share:

கோலாலம்பூர்,மார்ச் 4 -

வெற்றிகரமான இலக்கை அடைய சமூகத்தின் கூட்டு முயற்சியோடு, அரசாங்கத்தின் தார்மீகமான ஆதரவும்
கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தேவைப்படுகின்றன என்று பெரியார் கூட்டுறவு நிறுவனத் தலைவர் “முனைவர்” பெரு.அ.தமிழ்மணி, அக்கூட்டுறவு நிறுவனத்தின் 15- ஆம் ஆண்டுப் பேராளர் கூட்டத்தில் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

தன்மானப் பேராசான் பெரியார் பெயரிலான அக்கூட்டுறவு நிறுவனத்
தின்-15-ஆம் ஆண்டுப் பேராளர் கூட்டம், நேற்று, கோலாலம்பூர், மட்ராஸ் கெபி யில்,நடைபெற்ற போது, அதன் தலைவர்
முனைவர்- பெரு.அ.தமிழ் மணி மேற்கண்டவாறு கூறினார்.

50- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த பேராளர் கூட்டத்தில், 2024 -2025 ஆம் ஆண்டுக்கான இயக்குனர் வாரிய உறுப்பினர்கள் போட்டியும் இன்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, தலைவராக முனைவர் பெரு.அ.தமிழ்மணி, துணைத் தலைவராக த.பரமசிவம், செயலாளராக சி.மு.விந்தைக்குமரன் துணைச் செயலாளராக சரவணன், பொருளாளராக செ.தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இயக்குநர் வாரிய உறுப்பினர்களாக டத்தோ.மனோ, மு.மணிமாறன் பனிமலர் பி.கோவிந்தசாமி, மூர்த்தி, க.ப.சுப்பையா அருள்எழில் ஆகிய எழுவரும், உட்கணக்காய்வாளர்களாக த.சுப்பையா மற்றும் வீ.நேயமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டுறவுக் கழகத்தின் நல்லுரையாளராக பொருளியலாளர்
இரா.மாசிலாமணி நியமனம் செய்யப்பட்டதோடு, பங்குத்தாரர்களுக்கு பங்குப் பத்திரமும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் ஆண்டு அறிக்கையோடு, கணக்கறிக்கையும் ஏகமனதாகப் பேராளர்களால் ஏற்கப்பட்டது. அத்துடன் வரும் ஆறு மாதத்திற்
கான, உத்தேசக் கணக்கு முன்னோட்டமும் கலந்துரையாடப்பட்டது.
இறுதியில் துணைச்செயலாளர் சரவணனின் நன்றியு
ரையோடு கூட்டம் நிறைவு பெற்றது.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்