இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, பாதசாரிகளையும், வாகனமோட்டிகளையும் சிரமத்தில் ஆழ்த்தியது.
இந்த திடீர் வெள்ளத்தினால் காஜாங் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
நீரின் மட்டம் முழங்கால் வரை உயர்ந்து, கரைபுரண்டோடியதால் காஜாங்கில் பல சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டன.








