ஈப்போ, மே 06-
ஈப்போவை சுற்றியுள்ள விபச்சார மையம் மற்றும் பொழுதுபோக்கு மையத்தில் நேற்று அதிகாலை மேற்கொண்ட Ops Gegar திடீர் சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 24 சட்டவிரோத குடியேறிகளை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 18 தாய்லாந்து பெண்கள், 5 வியட்நாம் பெண்கள் உட்பட ஒரு தாய்லாந்து ஆணும் அடங்குவர் என்று பேராக், மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் மியொர் ஹெஸ்புல்லாஹ் மியொர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.
20க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் மேல் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்ததற்காக சம்பந்தப்பட்ட பிரஜைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மியொர் ஹெஸ்புல்லாஹ் கூறினார்.
கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மேல் விசாரணைக்காக ஈப்போ குடிநுழைவு டிப்போவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மியொர் ஹெஸ்புல்லாஹ் மேலும் தகவல் அளித்தார்.
வெளிநாட்டு குடியேறிகளை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தும் அல்லது பாதுகாக்கும் எந்தவொரு முதலாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மியொர் ஹெஸ்புல்லாஹ் அறிவித்தார்.








