புத்ராஜெயா, ஜூன் 14-
பள்ளி பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கூடிய அதன் நடத்துநர்கள், தங்கள் லைசென்ஸை இழக்க நேரிடலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டீசல் விலை, லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி பேருந்துகளுக்கு உதவித் தொகை அடிப்படையில் சலுகைக்கட்டணமாக லிட்டருக்கு ஒரு வெள்ளி 88 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதற்கு காரணமே இல்லை. அப்படி, கட்டணத்தை உயர்த்தக்கூடிய பேருந்து ஓட்டுநர்கள் கண்டு பிடிக்கப்படுவார்களோனால் அவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நினைவுறுத்தியுள்ளார்.
பள்ளி பேருந்து கட்டணம் உயர்தப்பட்டால் அது பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகி விடும் என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
பள்ளி பேருந்து நடத்துநர்கள், உதவித் தொகை அடிப்படையில் டீசலை பெறுவதற்கு அவர்கள் சலுகை கட்டண அட்டைக்கு விண்ணப்பித்து, அதனை பெறுவார்களோனால அதற்குரிய உதவித் தொகையை அரசாங்கம் வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் விளக்கினார்.








