Jul 28, 2026
Thisaigal NewsYouTube
Felda குடியிருப்புவாசிகளின் நலனுக்காக அரசாங்கம் ஒரு புதிய அணுகுமுறையை அறிவிக்கும் - துணைப் பிரதமர் அகமாட் சைட் அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

Felda குடியிருப்புவாசிகளின் நலனுக்காக அரசாங்கம் ஒரு புதிய அணுகுமுறையை அறிவிக்கும் - துணைப் பிரதமர் அகமாட் சைட் அறிவுறுத்து

Share:

தேசிய நில மேம்பாட்டு வாரியமான Felda மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய அணுகுமுறைகளை அரசாங்கம் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று துணைப் பிரதமர் டத்துக் ஶ்ரீ டாக்டர் அகமாட் சைட் ஹமிடி தெரிவித்தார்.

குறிப்பாக, குடியேற்றவாசிகளின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு பெல்டா வில் உடனடி மாற்றங்களை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக புறநகர் வட்டார மேம்பாட்டு அமைச்சர் அகமாட் சைட் ஹமிடி கூறினார்.

அடுத்தடுத்த பல அணுகுமுறைகளை உடனடியாக அறிவிப்பேன் என்று 2024 ஆம் ஆண்டு பூமிபுத்தேரா பொருளாதார காங்கிரஸில் ஒரு சிறப்பு பேட்டியில் அகமாட் சைட் இதனை அறிவித்தார்.

பெல்டா வின் சரிவுற்ற செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த அகமாட் சைட், தேசிய ஏஜென்சிகளை மீட்டெடுக்கும் பொறுப்பு பெல்டா வின் கீழ் குடியேறியவர்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் அம்சத்தில் பார்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பெல்டா குடியிருப்பிலிருந்து புதிய தலைமுறையினர் வெளியேறாமல் இருப்பதற்கும், நகரத்திற்கு குடிபெயர்ந்து செல்லாமல் இருப்பதை தடுக்கவும் பெல்டா நிறுவனத்திற்கு தொழில்துறையை ஊக்குவிக்கும் முறையை அரசாங்கம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அகமாட் சைட் கேட்டு கொண்டார்.

குறிப்பாக, டிஜிட்டலின் பயன்பாடு அப்பகுதியில் அதீத கவனமாக செயல்பட தொடங்குவதுடன் அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கு பெரும் பங்காற்றும் என்று அகமாட் சைட் மேலும் வலியுறுத்தினர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்