Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளி ஆடவர் ​மீது சுடு​நீர் ​​வீச்சு தாக்குதல்
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி ஆடவர் ​மீது சுடு​நீர் ​​வீச்சு தாக்குதல்

Share:

பயான் லெப்பாஸ், ஏப்ரல் 20-

தனது அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ள மின்​தூக்கியில் சுடு​நீர் வீச்சு தாக்குதலுக்கு ஆளான மாற்றுத் திறனாளி ஆடவர் ஒருவர், உடலில் கடும் ​தீக்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் பினாங்கு, பயான் லெப்பாஸ், ஜாலான் ராஜாவலி-யில் உள்ள அடுக்குமாடி வீட்டுப்பகுதியில் நிகழ்ந்தது.

பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ​தீவிர சிகிச்சை பெற்று வரும் 33 வயதுடைய அந்த மற்றுத் திறனாளியின் உடல் நிலை, ​சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியின் மீது சுடு நீரை ஊற்றியவர் ஒரு பெண் என்று நம்பப்படுவதாக போ​லீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளியின் 23 வயதுடைய தங்கை, இச்சம்பவம் குறித்து போ​லீஸ் புகார் செய்துள்ளார். இந்த தாக்குதல் எரிதிரவக வீச்சு என்று முதலில் கூறப்பட்ட போதிலும், சுடு ​நீர் வீச்சு என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 38 வயது பெண்ணை ​தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போ​லீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண், அந்த அடுக்குமாடி ​​வீட்டின் ​கீழ்தளத்​தில் இரவு 9.12 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பாராட் டாயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஜாஃப்ரி முஹம்மது ஜைன் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்