May 22, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளி ஆடவர் ​மீது சுடு​நீர் ​​வீச்சு தாக்குதல்
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி ஆடவர் ​மீது சுடு​நீர் ​​வீச்சு தாக்குதல்

Share:

பயான் லெப்பாஸ், ஏப்ரல் 20-

தனது அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ள மின்​தூக்கியில் சுடு​நீர் வீச்சு தாக்குதலுக்கு ஆளான மாற்றுத் திறனாளி ஆடவர் ஒருவர், உடலில் கடும் ​தீக்காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் பினாங்கு, பயான் லெப்பாஸ், ஜாலான் ராஜாவலி-யில் உள்ள அடுக்குமாடி வீட்டுப்பகுதியில் நிகழ்ந்தது.

பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ​தீவிர சிகிச்சை பெற்று வரும் 33 வயதுடைய அந்த மற்றுத் திறனாளியின் உடல் நிலை, ​சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியின் மீது சுடு நீரை ஊற்றியவர் ஒரு பெண் என்று நம்பப்படுவதாக போ​லீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளியின் 23 வயதுடைய தங்கை, இச்சம்பவம் குறித்து போ​லீஸ் புகார் செய்துள்ளார். இந்த தாக்குதல் எரிதிரவக வீச்சு என்று முதலில் கூறப்பட்ட போதிலும், சுடு ​நீர் வீச்சு என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 38 வயது பெண்ணை ​தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போ​லீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெண், அந்த அடுக்குமாடி ​​வீட்டின் ​கீழ்தளத்​தில் இரவு 9.12 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பாராட் டாயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஜாஃப்ரி முஹம்மது ஜைன் தெரிவித்துள்ளார்.

Related News

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை