பணி ஓய்வுப்பெற்று நல்ல வாழ்க்கைச் சூழலில் உள்ள தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு அவர்களிடம் காதல் மொழி பேசி, பணத்தை சூறையாடும் லவ் ஸ்கேம் மோசடி தொடர்பில் ஒரு பெண் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓன் லைன் மூலமாக வலைவீசி ஆட்களை தங்கள் மாய வலையில் சிக்க வைக்கும் இக்கும்பல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கோலாலாம்பூர் மையப்பகுதியான பி. ரம்லியில் மூன்று வெவ்வேறு சோதனைகளில் போலீசார் ஈடுபட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.
இக்கும்பல் மலேசியா, சிங்கப்பூர், சீனாவை இலக்காக கொண்டு மோசடி வேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு


