பணி ஓய்வுப்பெற்று நல்ல வாழ்க்கைச் சூழலில் உள்ள தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு அவர்களிடம் காதல் மொழி பேசி, பணத்தை சூறையாடும் லவ் ஸ்கேம் மோசடி தொடர்பில் ஒரு பெண் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓன் லைன் மூலமாக வலைவீசி ஆட்களை தங்கள் மாய வலையில் சிக்க வைக்கும் இக்கும்பல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கோலாலாம்பூர் மையப்பகுதியான பி. ரம்லியில் மூன்று வெவ்வேறு சோதனைகளில் போலீசார் ஈடுபட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.
இக்கும்பல் மலேசியா, சிங்கப்பூர், சீனாவை இலக்காக கொண்டு மோசடி வேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


