ஈப்போ, செப்டம்பர்.01-
ஈப்போவில் வர்த்தகத் தளம் ஒன்றில் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் இரண்டு நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை என்ற போதிலும் அந்த வர்த்தகத் தளம் கடுமையாகச் சேதமுற்றதாக பேரா மாநில போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
நேற்று காலை 4.58 மணியளவில் ஈப்போ, பனோராமா லப்பாங்கான் பெர்டானாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தாக 43 வயது மாது ஒருவர் போலீசில் புகார் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.








