Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக டான் ஸ்ரீ முஹ்யிட்டின் சீராய்வு மனு தாக்கல்
தற்போதைய செய்திகள்

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக டான் ஸ்ரீ முஹ்யிட்டின் சீராய்வு மனு தாக்கல்

Share:

கோலாலம்பூர், மார்ச் 27

ஜானா விபாவா திட்ட நிதிமுறைகேட்டிலிருந்து தம்மை விடுவித்திருந்த உயர்நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்த கோலாலம்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹ்யிட்டின் யாஸ்சின் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சேத்தன் ஜேத்வானி சட்ட நிறுவனத்தின் மூலமாக அந்த மனு பதிவு செய்யப்பட்டது.

ஜானா விபாவா திட்டத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக தொடரபட்ட வழக்கில், பேரிக்காதான் நசியனால் கூட்டணி தலைவருமான டான் ஸ்ரீ முஹ்யிட்டின் யாஸ்சின் மீதான 4 குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக உள்ளதாக கூறி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அவ்வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்திருந்தது.

பின்னர், அத்தீர்ப்பை எதிர்த்து அரச தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், மூவர் அடங்கிய நீதிபதி அமர்வுக்கு தலைமைத் தாங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹதாரியாஹ் சுயேட் அலி, கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தார்.

டான் ஸ்ரீ முஹ்யிட்டின்-னுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தெளிவாக உள்ளதால், அவ்வழக்கை மீண்டும் நடத்துவதற்கு அவர் அனுமதி அளித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்