Mar 20, 2026
Thisaigal NewsYouTube
20 நாய்கள் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டன
தற்போதைய செய்திகள்

20 நாய்கள் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டன

Share:

உணவில் விஷம் வைக்கப்பட்டு, கொல்லப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் 20 தெரு நாய்கள் உடல்கள் ஒரு வீட்மைப்புப்பகுதியில் கிடந்தது, பிராணிகள் ஆர்வலர்களை ஆத்திரமடைய செய்துள்ளது.

சிரம்பான், தாமான் செரி ஆம்பர் என்ற அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் அந்த நாய்கள் கொல்லப்பட்டு கிடந்தது நேற்று மே முதல் தேதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றத்தை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவேசத்துடன் கோரிக்கை விடுத்தார் பிராணிகள் ஆர்வலரும்,அந்த அடுக்கு மாடி குடியிருப்புவாசியுமான எஸ்.எல். லியூ என்பவர்.

கொல்லப்பட்ட நாய்களில் சில, குட்டிகளாக பரிதாபமாக இறந்து கிடந்தது நேற்றைய மே தினத்தை தமக்கு சோகமாக்கியது என்று தனது வேதனையை அந்தப் பெண்மணி வெளிப்படுத்தினார்.

அவை தெரு நாய்களாக இருந்தாலும் விஷம் வைத்து கொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது, இதில் ஒரு குட்டி நாயை மட்டுமே தம்மால் காப்பாற்ற முடிந்ததாக அந்த குடியிருப்பு வாசி கூறுகிறார்.

நாய்கள் இறந்த கிடக்கும் காட்சியைக்கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து