பாசிர் மாஸ், கெலாங் மாஸ் கிராமம், அலோர் பிங்கன் கிராமம் - கில் நேற்று நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரும் சந்தேகிக்கும் நபரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிமுகமானவர்களாவர்.
ஆயுதத்தை பயன்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் 39 மற்றும் 427 ஆகிய பிரிவுகளின் கீழ் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
தற்போது, இவ்வழக்கு விசாரணை 80 சதவீதம் முடிவடைந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட நபர் மீது ஏற்கனவே 7 குற்றப்பதிவுகள் இருப்பது தெரியவந்திருப்பதாவும் முகமது ஜக்கி கூறினார்.
சம்பவத்தின் போது சந்தேகிக்கும் நபர் semi auto துப்பாக்கி உட்பட Luger 9 தோட்டாக்களை பயன்படுத்திருப்பதாக முகமது ஜக்கி மேலும் குறிப்பிட்டார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே நான்கு துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும், அந்த பயங்கர சத்தத்தை கேட்டு பாதிக்கப்பட்டவர் விழித்து கொண்டதாகவும் முகமது ஜக்கி அறிவித்தார்.








