Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் கொலை, இரண்டு நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவர் கொலை, இரண்டு நபர்கள் கைது

Share:

கோலாலம்பூர், செதாப்பா, டனாவ் கோத்தா வில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆடவர்களை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரர் செய்து கொண்ட போ​லீ​ஸ் புகாரைத் தொடர்ந்து அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக வங்சா மாஜூ போ​லீஸ் நிலையத் தலைவர் அஷாரி அபு ஸமாஹ் தெரிவித்தார்.

கழுத்து,காது மற்றும் உடலின் இதர பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் சாலையோரத்தில் லோரி ஒன்றில் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த 56 வயதுடைய நபரை , மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் 302 பிரி​வின் ​கீழ் 36 மற்றும் 37 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று அஷாரி அபு ஸமாஹ் குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு