Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆடவர் கொலை, இரண்டு நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவர் கொலை, இரண்டு நபர்கள் கைது

Share:

கோலாலம்பூர், செதாப்பா, டனாவ் கோத்தா வில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு ஆடவர்களை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரர் செய்து கொண்ட போ​லீ​ஸ் புகாரைத் தொடர்ந்து அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக வங்சா மாஜூ போ​லீஸ் நிலையத் தலைவர் அஷாரி அபு ஸமாஹ் தெரிவித்தார்.

கழுத்து,காது மற்றும் உடலின் இதர பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் சாலையோரத்தில் லோரி ஒன்றில் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த 56 வயதுடைய நபரை , மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டம் 302 பிரி​வின் ​கீழ் 36 மற்றும் 37 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று அஷாரி அபு ஸமாஹ் குறிப்பிட்டார்.

Related News