Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகள் அல்ல
தற்போதைய செய்திகள்

கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகள் அல்ல

Share:

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது ஜன விபாவா திட்டத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக கொண்டு வரப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுகள், கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள் அல்ல என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தனது எழுத்துப்பூர்வமான தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்து முகைதீனை விடுதலை செய்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அந்த நான்கு குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ள அப்பீல் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான தீர்ப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.

முகைதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டிலும் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மிகத் தெளிவாக பட்டியலிட்டு இருப்பதையும் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹதாரியா சையத் இஸ்மாயில் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அந்த குற்றங்கள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து விரிவான விவரங்களை பிராசிகியூஷன் தரப்பு தர வேண்டியதில்லை. மாறாக, வழக்கு விசாரணையின் போது வழங்கினால் போதுமானதாகும் என்று நீதிபதி டத்தோ ஹதாரியா தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து