கோலாலம்பூர், மே 03-
பூனைக்குட்டி ஒன்றை உயிருடன் எரித்ததாக இளைஞன் ஒருவர் காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
சிறார் குற்றவாளியான 13 வயது அந்த இளைஞன், மாஜிஸ்திரேட் நிக் சித்தி நோராஸ்லினி நிக் முகமது ஃபைஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 20,000 வெள்ளி அபராதம் மற்றும் கூடிய பட்சம் 100,000 வெள்ளி அபராதம் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 34 பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கவிருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பிற்பகல் 1.08 மணியளவில் காஜாங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் பூனைக்குட்டி ஒன்றுக்கு உயிருடன் தீ வைத்து காயப்படுத்தியதாக அவ்விளைஞன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








