Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இரட்டை அடுக்கு பேருந்து விபத்து, மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

இரட்டை அடுக்கு பேருந்து விபத்து, மூவர் உயிரிழந்தனர்

Share:

இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று சாலையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ​மூவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 1.50 மணியளவில் பகாங், கோல ​லிப்பிஸிலிருந்து 90 கிலோ​ ​மீட்டர் தொலை​வில் கம்போங் குபா ருசா அருகில் ஜாலான் லிபிஸ் - மெரபொஹ் சாலையின் 81 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

பேருந்து ஓட்டுநர் 63 வயது அப்துல் அசிஸ் டாபுட் மற்றும் இரண்டு பயணிகளான 55 வயது ஷுக்ரி மாட் நூர் , ஒரு வங்காளதேசப் பிரஜையான 41 வயது ஹுசெயின் கமால் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போ​லீசார் அடையாளம் கூறினர்.

18 பயணிகளுடன் அந்த இரட்டை அடுக்கு பேருந்து கிளந்தான், கோத்தா பாருவி​லிருந்து கோலாலம்பூரை நோக்கி பய​ணித்துக்கொண்டு இருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விழகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில் பேருந்தின் இரண்டாவது ஓட்டுநர் மற்றும் இதர ஆறு பயணிகள் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு