இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று சாலையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 1.50 மணியளவில் பகாங், கோல லிப்பிஸிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் கம்போங் குபா ருசா அருகில் ஜாலான் லிபிஸ் - மெரபொஹ் சாலையின் 81 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
பேருந்து ஓட்டுநர் 63 வயது அப்துல் அசிஸ் டாபுட் மற்றும் இரண்டு பயணிகளான 55 வயது ஷுக்ரி மாட் நூர் , ஒரு வங்காளதேசப் பிரஜையான 41 வயது ஹுசெயின் கமால் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
18 பயணிகளுடன் அந்த இரட்டை அடுக்கு பேருந்து கிளந்தான், கோத்தா பாருவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி பயணித்துக்கொண்டு இருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விழகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.இதில் பேருந்தின் இரண்டாவது ஓட்டுநர் மற்றும் இதர ஆறு பயணிகள் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








