Mar 18, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கியுடன் இருந்த 15 வயது சிறுவன் கைது
தற்போதைய செய்திகள்

துப்பாக்கியுடன் இருந்த 15 வயது சிறுவன் கைது

Share:

ஜொகூர் பாரு, மார்ச் 4 -

15 வயதுடைய சிறுவன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகியதை தொடர்ந்து அச்சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கோத்தா கினாபாலு, ஜாலான் காயு மாடாங் கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் சம்பந்தப்பட்ட சிறுவன் ஜன்னலுக்கு அருகில் ஆயுதங்களுடன் நிற்பதை போன்று அப்புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாலை 5:36 மணியளவில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக கோத்தா கினாபாலு போலீஸ் தலைவர் சைடி அப்துல்லா தெரிவித்தார்.

வீட்டை சோதனையிட்ட போது ஏ.கெ47 துப்பாக்கி உட்பட மற்றொரு துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டதாக சைடி அப்துல்லா மேலும் விளக்கமளித்தார்.

கடந்த மார்ச் 2 ஆம் தேதி காலை 9 மணியளவில் அச்சிறுவன் கையில் போலியான துப்பாக்கியுடன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் மற்றவர்களுக்கு அச்சுறுத்தியது விசாரணையில் தெரியவந்ததாக சைடி அப்துல்லா விவரித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு