Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சுடு நீர் ஊற்றப்பட்ட மாற்றுத் திறனாளிக்கும், அந்த மாதுவிற்கும் பிரச்னை இருந்துள்ளது
தற்போதைய செய்திகள்

சுடு நீர் ஊற்றப்பட்ட மாற்றுத் திறனாளிக்கும், அந்த மாதுவிற்கும் பிரச்னை இருந்துள்ளது

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 22-

பினாங்கில் வீடமைப்புப்பகுதி ஒன்றில் மின்தூக்கியில் மாது ஒருவரினால் சுடு நீர் தாக்குதலுக்கு ஆளான மாற்றுத் திறனாளிக்கும், அந்த மாதுவிற்கும் நீண்ட காலமாகவே தகராறு இருந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவிந்துள்ளது.

ஒரே வீடமைப்பு பகுதியை சேர்ந்தவர்களான மன நலிவு கொண்ட அந்த 33 வயது ஆடவருக்கும், 39 வயதுடைய அந்த சீன மாதுவிற்கும் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக தகாராறு இருந்துள்ளது. அதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளதாக பூர்வாங்க விசாரணையில் என்று பாராத் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் கமாருல் ரிசால் ஜெனல் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்விவகாரத்தை தாங்கள் இன்னமும் விசாரணை செய்து வருவதாக இன்று நடைபெற்ற செய்தியாளரகள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் பினாங்கு, பயான் லெப்பாஸ், ஜாலான் ராஜாவலி-யில் உள்ள அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் மின்தூக்கியில் ஏறுவதற்கு முற்பட்ட சோலை ராஜ் என்ற மாற்றுத் திறனாளியை, மின்தூக்கியில் இருந்த சீன மாது ஒருவர், சுடு நீர் வீச்சு தாக்குதல் நடத்தியதில் அந்த மாற்றுத் திறனாளி காயம் அடைந்தார்.

இச்சம்பவம் திடீரென்று ஏற்பட்டதைப் போல் இருந்தாலும் ஒரே வீடமைப்புப்பகுதியை சேர்ந்த இருவரும் ஒருவருககொருவர் நன்று அறிமுகமானவர்கள் ஆவார். ஆனால், அவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது என்று கமாருல் ரிசால் தெரிவித்தார்.

எனினும் இந்த தாக்குதலை நடத்திய மாதுவை மனநல சோதனைக்கு உட்படுத்துவதா? என்பது குறித்து போலீசார் பரிசீலனை செய்து வருவதாக கமாருல் ரிசால் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்