Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தில் குடும்ப வன்முறைகள்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநிலத்தில் குடும்ப வன்முறைகள்

Share:

சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஜுலை மாதம் வரை குடும்ப வன்முறைகள் தொடர்பாக 727 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 1,285 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் இவ்வாண்டு முதல் அரையாண்டில் மேற்கண்ட எண்ணிக்கையில் குடும்ப வன்முறைகள் தொடர்பில் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக டத்தோ சசிகலா தேவி குறிப்பிட்டார்.

குடும்ப வன்முறைகள் தொடர்பில் பெரும்பாலான சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள், 26 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என்று போலீஸ் புகார்களை அடிப்படையாக கொண்டு அறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குடும்பப் பெண்கள் ஆவர். அதேவேளையில் நிபுணத்துவ தொழில்துறையை சேர்ந்தவர்களும், படித்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது