Mar 19, 2026
Thisaigal NewsYouTube
காலுறை விவகாரத்தில் அம்னோ-வைவிட PAS கட்சிக்கு புரிந்துணர்வு உள்ளது
தற்போதைய செய்திகள்

காலுறை விவகாரத்தில் அம்னோ-வைவிட PAS கட்சிக்கு புரிந்துணர்வு உள்ளது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 01 -

அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனை செய்திருந்த KK மார்ட் நிறுவன கடையை புறக்கணிக்கும் பரப்புரைக்கு ஆதரவு அளிக்கப்படாது என PAS கட்சி நேற்று கூறியிருந்தது.

அந்த பரப்புரையை முன்னெடுத்த அம்னோ-வைக் காட்டிலும் PAS கட்சி, உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலை நன்கு புரிந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சயிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசிய அரசியலுக்கு ஏற்புடைய வகையிலான நிலைப்பாட்டை PAS கட்சி வெளிப்படுத்தியுள்ளது. மலாய்க்காரர்கள் மற்றும் நாட்டின் நல்வாழ்விற்காக, சீன எதிர்ப்பாளராக இருக்கக்கூடாது என்பதே சரியாகும்.

உள்நாட்டு பொருளாதாரத்தில் சீன சமூகத்தினர் ஒன்றுடன் ஒன்றாக ஒன்றிணைந்துவிட்டனர். இனவாதமும் புறக்கணிப்பு பரப்புரையும் எவ்வித மாற்றங்களைக் கொண்டு வந்துவிடாது. KK மார்ட் கடைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் புறக்கணிப்பு பரப்புரையால் UMNO பெருமிதம் கொள்ளுமானால், வரக்குடிய தேர்தல்களில் அக்கட்சி இல்லாமலேயே போகும்.

அவர்களின் அச்செயலால் சீன சமூகத்தினர் பாஸ் கட்சியை நோக்கி செல்வதற்கு அது வாய்ப்பாக அமையும் எனவும் டத்தோ ஸ்ரீ சயிட் இப்ராஹிம் கூறினார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்