வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் Mercedes - Benz ரக கார் ஒன்று திடீரென்று தீப்பற்றிக்கொண்டதில் இருவர் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினர்.
இச்சம்பவம் பிறப்கல் 3.15 மணியளவில் கெடா குரூண், அருகில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குள் விரைவதற்குள் கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்ததாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும் தீ நாலாபுறமும் சூழ்வதற்கு முன்னதாகவே காரின் ஓட்டுநரும், பயணி ஒருவரும் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.








