Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் நாடாளுமன்றக்கூட்டத்தில் மாமன்னர் பங்கேற்றார்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் நாடாளுமன்றக்கூட்டத்தில் மாமன்னர் பங்கேற்றார்

Share:

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் அக்குடியரசின் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்.

மலேசிய மாமன்னர் ஒருவர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து, அந்த அவையின் அமர்வை நேரில் பார்வையிட்டது இதுவே முதல் முறையாகும்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு மலேசிய மாமன்னர் வந்திருப்பது குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் சீ கியான் பெங், அறிவித்தார். கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாமன்னரையும் அவருடன் வந்திருந்த பேராளர் குழுவையும் வரவேற்றனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற அமர்வை மாமன்னர் நேரில் கண்டார்.

மலேசிய மாமன்னரின் இந்த வருகையானது, இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான பரஸ்பர உறவை காட்டுகிறது என்று சபாநாயகர் சீ கியான் பெங் புகழாரம் சூட்டினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து