Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் நாடாளுமன்றக்கூட்டத்தில் மாமன்னர் பங்கேற்றார்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் நாடாளுமன்றக்கூட்டத்தில் மாமன்னர் பங்கேற்றார்

Share:

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் அக்குடியரசின் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்.

மலேசிய மாமன்னர் ஒருவர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து, அந்த அவையின் அமர்வை நேரில் பார்வையிட்டது இதுவே முதல் முறையாகும்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு மலேசிய மாமன்னர் வந்திருப்பது குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் சீ கியான் பெங், அறிவித்தார். கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாமன்னரையும் அவருடன் வந்திருந்த பேராளர் குழுவையும் வரவேற்றனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற அமர்வை மாமன்னர் நேரில் கண்டார்.

மலேசிய மாமன்னரின் இந்த வருகையானது, இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான பரஸ்பர உறவை காட்டுகிறது என்று சபாநாயகர் சீ கியான் பெங் புகழாரம் சூட்டினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்