6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர், தேர்தலை நடத்த எல்லா நிலைகளிலும் ஆயத்தமாக உள்ளது. அதன் அதிகாரிகள் அனைவரும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு தயாராக காத்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. சிலாங்கூர் மாநிலத்தில் 56 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் வேளையில் வாக்களிப்பு மையங்களில் இறுதி கட்ட மீள்பார்வையிடும் பணிகள் இன்றிரவு நடைபெற்றது. தேர்தல் வாக்களிப்பு, தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கு சிலாங்கூர் மாநிலத்தில் வாக்களிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளில் வாக்களிப்பு வழித்தடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்ததுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


