புக்கிட் காயூ ஈத்தாம் எல்லைக் கட்டுப்பாட்டுப் படைத் தளபதி சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக, எல்லைப் பகுதியில் உளவுப்பிரிவில் பணியாற்றும் கோப்ரல் தகுதியுடைய காவற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாஎ. அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த அதிகாரி, இச்சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், துப்பாக்கிச் சூடு நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த கும்பலுடன் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கெடா மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா தெரிவித்தார். போதைப்பொருள் பரிசோதனையில் அந்த அதிகாரிக்குச் சாதகமான முடிவு வந்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினரையே குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் துணிகரச் சம்பவம் குறித்து காவற்படை முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய செய்திகள்
எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது
Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்


