May 3, 2026
Thisaigal NewsYouTube
எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

Share:

புக்கிட் காயூ ஈத்தாம் எல்லைக் கட்டுப்பாட்டுப் படைத் தளபதி சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக, எல்லைப் பகுதியில் உளவுப்பிரிவில் பணியாற்றும் கோப்ரல் தகுதியுடைய காவற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாஎ. அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த அதிகாரி, இச்சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், துப்பாக்கிச் சூடு நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த கும்பலுடன் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கெடா மாநிலக் காவற்படைத் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா தெரிவித்தார். போதைப்பொருள் பரிசோதனையில் அந்த அதிகாரிக்குச் சாதகமான முடிவு வந்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினரையே குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் துணிகரச் சம்பவம் குறித்து காவற்படை முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News