குளுவாங், தாமன் முகிப்பாவில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி, கத்தியால் தனது மனைவியின் கழுத்தையும் கைகளையும் அறுத்துக் கொலை செய்ய முயன்ற 56 வயது ஐ ஜான் யீ, இன்று நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். பொறாமை காரணமாக இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்த நபருக்கு எதிராகக் கொலை முயற்சி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், அவரை மனநலப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related News

பெக்கான் நானாஸ்: கடும் சூறாவளியால் 28 வீடுகள் சேதம்; பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பாரம்பரியக் கலாச்சாரமே மலாக்காவின் பலம்; தெருவோர டிஸ்கோக்கள் தேவையில்லை: டாக்டர் அக்மல் சாலே காட்டம்

மதுபோதை ஓட்டுநரின் காரால் மோதப்பட்டு தம்பதியர் உயிரிழப்பு

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 4 இளைஞர்கள் கைது; 271 அபராதங்கள் விதிப்பு

மலேசியாவில் வெப்ப அலையினால் 56 பேர் பாதிப்பு; இருவர் பலி


