மலேசிய ஊடக மன்றத்தின் தலைவராக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டான் ஸ்ரீ நளினி பத்மநாதன் நியமிக்கப்பட்டிருப்பது, அந்த மன்றத்திற்கு ஒரு புதிய தோற்றத்தையும் நம்பிக்கையையும் வழங்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று பினாங்கில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான 'தேசிய ஊடகவியலாளர் தினமான ஹவானா மாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்துப் பேசிய பிரதமர், "நளினியின் இந்த நியமனம் மிகவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும் என்றார்.
நீதித்துறைப் பின்னணி, சிறந்த செயல்பாட்டுப் பதிவு மற்றும் நேர்மை கொண்ட ஒரு நபர் இதில் இணைந்திருப்பது மன்றத்திற்குப் பெருமை சேர்க்கிறது," என்றார்.
இந்நிகழ்வில் பினாங்கு முதலமைச்சர் ,சாவ் கோன் யாவ் , தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில், பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ வோங் சுன் வை மற்றும் டான் ஸ்ரீ நளினி பத்மநாதன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








