ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் நெருங்கும் வேளையில், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்குள் ஒற்றுமையைப் பேணுவதே தற்போதைய முக்கிய நோக்கம் என கெராக்கான் கட்சி வலியுறுத்தியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ், ஜூலை 11-ல் நடைபெறும் ஜோகூர் தேர்தலையும், ஆகஸ்ட் 1-ல் நடைபெறும் நெகிரி செம்பிலான் தேர்தலையும் கூட்டாக எதிர்கொள்வதே முன்னுரிமை என்றார்.
பெர்சத்து கட்சியுடன் பாஸ் உறவை முறித்துக் கொண்டதால் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், கெராக்கான் வெல்லக்கூடிய தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் என்றார். இதற்கிடையே, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் தயாரிப்புகள் குறித்து விவாதிக்க வரும் திங்கள்கிழமை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளது.








