மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா, பெர்லிஸ் மற்றும் கெடாவின் கோத்தா ஸ்டார் பகுதிக்கு ஆரஞ்சு நிறத்திலான இரண்டாம் கட்ட வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 37°C முதல் 40°C வரை வெப்பநிலை பதிவாகும் போது இந்த இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கெடாவின் பாலிங், பெண்டாங் மற்றும் போக்கோக் செனா ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மொத்தம் 5 இடங்கள் இந்த தீவிர எச்சரிக்கைப் பட்டியலில் உள்ளன.
நாடு முழுவதும் மொத்தம் 21 பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிக், பாடாங் தெராப் உள்ளிட்ட பகுதிகளில் 35°C முதல் 37°C வரையிலான முதல் கட்ட மஞ்சள் எச்சரிக்கை நீடிக்கிறது.
பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் அருந்தி, வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.








