Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இனப் பதற்றத்தை தூண்டும் அக்மால் சாலேஹ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
தற்போதைய செய்திகள்

இனப் பதற்றத்தை தூண்டும் அக்மால் சாலேஹ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 05-

அல்லாஹ் சொல் கொண்ட காலுறை விவகாரம் தொடர்பில், மக்களிடையே சினத்தை மூட்டி, இன மற்றும் சமய பதற்றத்தை ஏற்படுத்தும் உம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சரவாக்-க்கைச் சேர்ந்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஜாஹ் வலியுறுத்தினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிய செய்வதோடு, காலுறை விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர உள்துறை அமைச்சு உட்பட அமலாக்கத் தரப்பு பல முயற்சிகளை எடுத்துவிட்டாலும், டாக்டர் அக்மால் சாலேஹ் தொடர்ந்து மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி வருகிறார்.

சம்பந்தப்பட்ட காலுறையை விற்பனை செய்த KK மார்ட் கடையை புறக்கணிக்கும் பரப்புரையை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் அமைதியுடைய மாநிலமாக இருந்துவரும் சரவாக்-க்கில் KK மார்ட் கடைக்கு எதிரான வன்முறை நிகழும் என தாம் நினைத்திருக்கவில்லை என்றார் அப்துல் கரீம்.

டாக்டர் அக்மால் சாலேஹ் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததும் KK மார்ட் கடைகள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்கள் குறித்த விசாரணை தாமதமாக மேற்கொள்ளப்படுவதும் தமக்கு வியப்பளிப்பதாக, அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஜாஹ் கூறினார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்