May 22, 2026
Thisaigal NewsYouTube
இனப் பதற்றத்தை தூண்டும் அக்மால் சாலேஹ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
தற்போதைய செய்திகள்

இனப் பதற்றத்தை தூண்டும் அக்மால் சாலேஹ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 05-

அல்லாஹ் சொல் கொண்ட காலுறை விவகாரம் தொடர்பில், மக்களிடையே சினத்தை மூட்டி, இன மற்றும் சமய பதற்றத்தை ஏற்படுத்தும் உம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சரவாக்-க்கைச் சேர்ந்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஜாஹ் வலியுறுத்தினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிய செய்வதோடு, காலுறை விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர உள்துறை அமைச்சு உட்பட அமலாக்கத் தரப்பு பல முயற்சிகளை எடுத்துவிட்டாலும், டாக்டர் அக்மால் சாலேஹ் தொடர்ந்து மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி வருகிறார்.

சம்பந்தப்பட்ட காலுறையை விற்பனை செய்த KK மார்ட் கடையை புறக்கணிக்கும் பரப்புரையை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் அமைதியுடைய மாநிலமாக இருந்துவரும் சரவாக்-க்கில் KK மார்ட் கடைக்கு எதிரான வன்முறை நிகழும் என தாம் நினைத்திருக்கவில்லை என்றார் அப்துல் கரீம்.

டாக்டர் அக்மால் சாலேஹ் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததும் KK மார்ட் கடைகள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்கள் குறித்த விசாரணை தாமதமாக மேற்கொள்ளப்படுவதும் தமக்கு வியப்பளிப்பதாக, அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஜாஹ் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு