Mar 19, 2026
Thisaigal NewsYouTube
உயர் அதிகாரி உட்பட இரு போலீஸ்காரர்களுக்கு தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

உயர் அதிகாரி உட்பட இரு போலீஸ்காரர்களுக்கு தடுப்புக்காவல்

Share:

கோலாலம்பூர், மார்ச் 25.

கோலாலம்பூர் வட்டாரத்தில் சட்டவிரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவற்றுக்கு பாதுகாப்பு அளித்து வந்ததாக கூறப்படும் ஓர் உயர் போலீஸ் அதிகாரியையும், ஒரு போலீஸ்காரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM செய்துள்ளது.

அந்த இரு போலீஸ்காரர்களும் நேற்று புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

அந்த உயர் போலீஸ் அதிகாரிக்கு மூன்று நாள் தடுப்புக்காவலும், ஒரு போலீஸ்காரருக்கு ஒரு நாள் தடுப்புக்காவலும் பெறப்பட்டுள்ளதாக SPRM உளவுப்பிரிவின் இயக்குநர் டத்தோ சய்னுள் தாருஸ் தெரிவித்தார்.

40 வயதுடைய அந்த போலீஸ் அதிகாரி கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரையில் விபச்சாரம், சூதாட்டம், குண்டர் கும்பல் நடவடிக்கைகள் போன்றவற்றை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட கும்பல்களிடமிருந்து லஞ்சம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அந்த உயர் போலீஸ் அதிகாரிக்கு சொந்தமான சில வர்த்தகத் தளங்களில் SPRM மேற்கொண்ட சோதனையில் 12 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான ரொக்கத் தொகை மீட்கப்பட்டுள்ளது.

கையூட்டும் வாங்கும் விவகாரத்தில் அந்த போலீஸ் உயர் அதிகாரியுடன் தொடர்பில் இருந்த இதர நபர்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாக டத்தோ சய்னுள் தாருஸ் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

உயர் அதிகாரி உட்பட இரு போலீஸ்காரர்களுக்கு தடுப்புக்காவல் | Thisaigal News