Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கடன் கொடுக்க மறுத்ததால் நண்பரை பாராங்கினால் வெட்டினார்
தற்போதைய செய்திகள்

கடன் கொடுக்க மறுத்ததால் நண்பரை பாராங்கினால் வெட்டினார்

Share:

கடன் கேட்டு வந்த தமது நண்பருக்கு பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படும் 33 வயது நபர், பாராங்கினால் வெட்டப்பட்டதில் கடும் காயத்திற்கு ஆளாகினார்.

இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் போர்ட்டிக்சன், பெக்கான் புக்கிட் பெலன்டோக் என்ற இடத்தில் ஒரு கிளிக்கிற்கு அருகில் நிகழ்ந்தது.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இடது உள்ளங்கை, வலது முழங்கை,வலது முழுங்கால் ஆகிய பகுதிகளில் ஆழமான வெட்டுக்காயங்களுடன் ஆடவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முஹமாட் தெரிவித்தார்.

இந்த தாக்குதலை நடத்திய நபர், மதுபோதையில் இருந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

33 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழியை போலீசார் இன்று அதிகாலை 1.50 மணியளவில் போர்ட்டிக்சன், சுவா, தாமான் மூர்னியில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பாராங்கை ஒன்றையும் மீட்டதாக ஐடி ஷாம் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு