May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்

Share:

பத்து பாஹாட், மே 03-

பத்து பாஹாட் , ஜாலான் ரஹ்மாட்டில் முதியவர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகியதில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று இரவு 8 மணியளவில் இச்சம்பவத்தை குறித்து போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக பத்து பாஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் பயணித்துச் சென்ற ஹூண்டாய் எலன்ட்ரா ரக கார், 24 வயது பெண் ஒருவர் ஓட்டி வந்த பெரோடுவா பெஸ்ஸா காருடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக இஸ்மாயில் டோல்லா கூறினார்.

பத்து பாஹாட்டிலிருந்து ஜாலான் பந்தாய்யை நோக்கி வந்து கொண்டிருந்த போது அம்முதியவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த அப்பெண்ணின் காரை மோதி விபத்துக்குள்ளாகியதாக இஸ்மாயில் டோல்லா அறிவித்தார்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அப்பெண் உட்பட அவரின் பயணிகளும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News