Aug 2, 2026
Thisaigal NewsYouTube
PERKESO dialisis நிலையங்கள் அதிகரிக்கப்படும் !
தற்போதைய செய்திகள்

PERKESO dialisis நிலையங்கள் அதிகரிக்கப்படும் !

Share:

நாடு முழுவது அதிகமான சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களை பெர்க்கேசோ திறக்கவுள்ளது என மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுடனான ஆலோசகைக் கூட்டம் நடத்தப்பட்டதில், தற்போது அதிகரித்து வரும் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைக்கானத் தேவையை ஈடு செய்ய சாத்தியப்படுத்த முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஒராண்டு காலக் கட்டத்தில் 9 ஆயிர பேருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் பீடித்திருப்பதாகவும் அவர்களில் பெரும்பான்மையினர் பெர்க்கேசோவின் சந்தாதாரர்கள் ஆவர் என்பது தமக்குக் கொடுக்கப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் தெரிந்து கொண்டதாக அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

பெர்க்கேசோவின் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தால் நோயாளிகளின் நிதிச்சுமை குறையும் மேலும், மருத்துவமனைகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றை அதிகம் நம்பி இருக்க வேண்டியதில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

தற்போது வரையில் பெர்க்கேசொவின் கீழ் கிள்ளான், ஷா ஆலாம், பத்து பகாட், குளுவாங் ஆகிய வட்டாரங்களில் 4 சிறுநீரக சுத்திகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அடுத்த டயலிசிஸ் மையம் பேரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிவக்குமார் மேலும் சொன்னார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு