Mar 12, 2026
Thisaigal NewsYouTube
PERKESO dialisis நிலையங்கள் அதிகரிக்கப்படும் !
தற்போதைய செய்திகள்

PERKESO dialisis நிலையங்கள் அதிகரிக்கப்படும் !

Share:

நாடு முழுவது அதிகமான சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களை பெர்க்கேசோ திறக்கவுள்ளது என மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுடனான ஆலோசகைக் கூட்டம் நடத்தப்பட்டதில், தற்போது அதிகரித்து வரும் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைக்கானத் தேவையை ஈடு செய்ய சாத்தியப்படுத்த முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஒராண்டு காலக் கட்டத்தில் 9 ஆயிர பேருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் பீடித்திருப்பதாகவும் அவர்களில் பெரும்பான்மையினர் பெர்க்கேசோவின் சந்தாதாரர்கள் ஆவர் என்பது தமக்குக் கொடுக்கப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் தெரிந்து கொண்டதாக அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.

பெர்க்கேசோவின் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தால் நோயாளிகளின் நிதிச்சுமை குறையும் மேலும், மருத்துவமனைகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றை அதிகம் நம்பி இருக்க வேண்டியதில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

தற்போது வரையில் பெர்க்கேசொவின் கீழ் கிள்ளான், ஷா ஆலாம், பத்து பகாட், குளுவாங் ஆகிய வட்டாரங்களில் 4 சிறுநீரக சுத்திகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அடுத்த டயலிசிஸ் மையம் பேரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிவக்குமார் மேலும் சொன்னார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து