Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மீன் பிடிக்கும்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கு, இருவர் தேடப்படுகின்றனர்
தற்போதைய செய்திகள்

மீன் பிடிக்கும்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கு, இருவர் தேடப்படுகின்றனர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 01 -

கோலாலம்பூர், செரி கெம்பாங்கான்-னிலுள்ள மொன்சூன் வடிக்காலில் நேற்று ஐவர் அடங்கிய குடும்பத்தினர் மீன் பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, திடிரென ஏற்பட்ட நீர் பெருக்கில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

அச்சம்பவத்தில் 40 வயது தந்தையான அஹ்மத் சுரியாடி , 9 வயது மகனான மோஹட் அலிப் உயிர் தப்பிய வேளையில், 10 வயது மகன் மோஹட் டிஹாம் சடலமாக மீட்கப்பட்டார்.

தாயாரான 38 வயது ஜூலியானா, அத்தம்பதியரின் கடைசி பிள்ளையான 4 வயது ரிஸ்க்கா அமெலியா இன்னமும் தேடப்பட்டு வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4.35 மணியளவில் தகவல் கிடைத்ததாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கமிசியோனிற் A A அன்பழகன் தெரிவித்தார்.

மாலை 3.30 மணியளவில் மீன் பிடித்திருந்த போது, திடிரென பெய்த மழையால் நீர் பெருக்கு ஏற்பட்டு சிமெண்ட்டிலான வடிக்கால் மீது நின்றுக்கொண்டிருந்த அவர்கள் பின்னர் 1.2 மீட்டர் ஆழம் கொண்டு நீரில் தடுமாறி விழுந்ததாக அவர் கூறினார்.

மாலை மணி 5.30 வாக்கில் இரண்டாவது மகனை பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்ட வேளையில், தேடல் மீட்பு நடவடிக்கையில் மாலை மணி 7 வாக்கில் சம்ப இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உயிரிழந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக அசிஸ்டென் கமிசியோனிற் A A அன்பழகன் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

மீன் பிடிக்கும்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கு, இருவர் தேடப்ப... | Thisaigal News