நெகிரி செம்பிலான், செனவாங்கில் 140 மில்லியன் ரிங்கிட் செலவில் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவின் புதிய வளாக கட்டடம் அடுத்த ஆண்டு கட்டப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
13-வது மலேசியத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள இப்புதிய நவீன வளாகம், செனவாங்கில் உள்ள தற்போதைய ஜேபிஜே அலுவலக இடத்திலேயே கட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கட்டுமானப் பணிகளுக்காகத் தற்போதைய கட்டடம் இடிக்கப்படவுள்ளதால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிரம்பான், எரா வாக் பகுதிக்கு ஜேபிஜே சேவைகள் தற்காலிகமாக மாற்றப்படும்.
இதற்கிடையில், நீலாய் நகராண்மைக் கழகக் கட்டடத்தில் 1.7 மில்லியன் ரிங்கிட் செலவில் மேம்படுத்தப்பட்டு, கடந்த ஜூன் 8 முதல் முழுமையாக இயங்கி வரும் புதிய நீலாய் ஜேபிஜே கிளை அலுவலகத்தையும் அமைச்சர் அந்தோணி லோக் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.








