Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சர்ச்சைக்குரிய காலுறை குறித்து சினமூட்டும் பதிவுகளை இட்ட வலைத்தளவாசிகள் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

சர்ச்சைக்குரிய காலுறை குறித்து சினமூட்டும் பதிவுகளை இட்ட வலைத்தளவாசிகள் வலைவீச்சு

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29-

அல்லா சொல் கொண்ட காலுறை விற்கப்பட்ட சர்ச்சை தொடர்பில், இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் என 3R விவகாரங்கள் குறித்து சினமூட்டும் தன்மையிலான பதிவுகளை இட்ட சமூக ஊடக பயனர்களை அடையாளம் காண, தொடர்பு பல்லூடக ஆணையம் - MCMC போலீசுடன் ஒத்துழைத்து வருகின்றது.

சம்பந்தப்பட்ட தரப்பினரை, தமது தரப்பு நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தும் என எச்சரித்த MCMC, சமூக ஊடகங்களில் 3R மற்றும் சீன மூட்டக்கூடிய கருத்துகளை பதிவிடுவதை அனைத்து தரப்பினர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

அளவுக்கதிகமாக சமூக ஊடகங்களில் சினமூட்டும் பதிவை இடுபவர்களிடம் விட்டுக்கொடுக்கும் போக்கு காட்டப்படாது எனவும் அது நினைவுறுத்தியது.

அல்லா சொல் கொண்ட காலுறையை விற்றதற்காக KK மார்ட் நிறுவன கடைக்கு எதிராக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ் உட்பட இஸ்லாமிய மக்கள் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தியதுடன் அக்கடைகளை புறக்கணிக்க வேண்டும் என பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

சம்பந்தப்பட்ட காலுறையை விற்றதற்காக KK மார்ட் நிறுவனம் மன்னிப்பை கோரிய நிலையில், இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியது தொடர்பில் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், சமூக ஊடகங்களில் அவ்விவகாரம் குறித்து வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பதிவுகள் இடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்