கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் பிரச்சார முதலீடாக தாங்கள் இன விவகாரத்தை பயன்படுத்தி வருவதாக கூறப்படுவதை பெரிக்காத்தான் நேஷனல் மறுத்துள்ளது.
தற்போது மலேசிய மக்கள் எதிர்கொண்டுள்ள யதார்த்தமான விவகாரங்களை மட்டுமே அக்கூட்டணி பயன்படுத்தி வருவதாக அதன் தேர்தல் இயக்குநர் முகமது சனுசி முகமது நோர் தெரிவித்தார்.
இன விவகாரத்தை எழுப்பவில்லை, யாரையும் சாடவில்லை என்பதே கோலகுபு பாரு தேர்தல் பிரச்சாரத்தில் பெரிக்காத்தான் நேஷனலின் நிலைப்பாடாகும் என்று கெடா மந்திரி பெசருமான சனூசி குறிப்பிட்டார்.








