Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இன பிளவு நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை இல்லையெனில் மலேசியா பின்னோக்கி செல்லும்! ராபிடாஹ் அஜிஸ் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

இன பிளவு நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை இல்லையெனில் மலேசியா பின்னோக்கி செல்லும்! ராபிடாஹ் அஜிஸ் எச்சரிக்கை

Share:

தனது தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காக, நாட்டில் இன பிளவுகளை ஏற்படுத்தி நிலைமையை மோசமடைய செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை அரசாங்கம் எடுக்காவிட்டால், மலேசியா பின்னோக்கி செல்லும் என அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை முன்னாள் அமைச்சர் டான் ஸ்ரீ ராபிடாஹ் அஜிஸ் எச்சரிக்கை விடுத்தார்.

அவ்விவகாரங்களில் அமலாக்கத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்காததது, மலேசிய தலைவர்கள் பலவீனமானவர்கள் என்பதுடன் எளிதில் மிரட்டலுக்கு இலக்காக்ககூடியவர்கள் என்ற தோற்றத்தைக் காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள தலைவர்களை குறுகிய சிந்தனையை உடைய சிறு நெப்போலியன்-கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதை போன்றவும் மலேசியா முறையான தலைமைத்துவம் இன்றி இருப்பது போல் பார்க்கப்படும் சூழல் உள்ளது.

மலேசியர்கள் அமைதியான சூழலில் ஒற்றுமையாக வாழ நினைக்கின்றனர். ஆனால், , சில தரப்பினரின் அளவுக்கதிகமான அகங்காரம் மற்றும் அதிகார பலத்தை காட்டும் போக்கின் காரணமாக, சிலர் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்த முயல்வதாக, ராபிடாஹ் அஜிஸ் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்