மின்சாரக் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் ஓர் இந்தோனேசிய தம்பதியர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் காஜாங், தாமான் மெகா, ஜாலான் மெகா 8 இல் நிகழ்ந்தது. அந்த இரண்டு மாடி தரை வீட்டில் படிக்கட்டு ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சாதன இணைப்பில் தீ ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் 50 வயது கணவரும், 40 வயது மனைவியும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, கடும் தீக்காயங்களுடன் உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முகமட் ரசாலி நான் இஸ்மயில் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


