மின்சாரக் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் ஓர் இந்தோனேசிய தம்பதியர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் காஜாங், தாமான் மெகா, ஜாலான் மெகா 8 இல் நிகழ்ந்தது. அந்த இரண்டு மாடி தரை வீட்டில் படிக்கட்டு ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சாதன இணைப்பில் தீ ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் 50 வயது கணவரும், 40 வயது மனைவியும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, கடும் தீக்காயங்களுடன் உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முகமட் ரசாலி நான் இஸ்மயில் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


