மின்சாரக் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் ஓர் இந்தோனேசிய தம்பதியர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் காஜாங், தாமான் மெகா, ஜாலான் மெகா 8 இல் நிகழ்ந்தது. அந்த இரண்டு மாடி தரை வீட்டில் படிக்கட்டு ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சாதன இணைப்பில் தீ ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் 50 வயது கணவரும், 40 வயது மனைவியும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, கடும் தீக்காயங்களுடன் உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முகமட் ரசாலி நான் இஸ்மயில் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


