May 22, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டும் பொழுது 'டிக் டோக் லைவ்   செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டும் பொழுது 'டிக் டோக் லைவ் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை

Share:

அலோர் ஸ்டார், ஏப்ரல் 7 -

ஓப்ஸ் ஹரி ராயா அய்டிபித்ரி திடீர் சோதனையில், விரைவு பேருந்து ஓட்டும் பொழுது டிக் டோக் லைவ் செய்யும் ஓட்டுநர்கள் மீது சாலை போக்குவரத்து துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு விரைவு பேருந்திலும் தனது இலாகா ரகசிய அதிகாரிகளை நியமித்திருப்பதுடன் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சாலை போக்குவரத்து துறையின் மூத்த இயக்குநர் டத்துக் லொக்மான் ஜாமான் தெரிவித்தார்.

பேருந்தில் அத்தகைய செயல்களை புரியும் பேருந்து ஓட்டுநர்கள் கண்டெடுக்கபட்டால் அதனை காணொளி எடுத்து, தேதி மற்றும் எங்கு நடந்தது என்ற விவரங்களுடன் போலீஸ் தரப்புக்கு அனுப்புமாறு லொக்மான் ஜாமான் பொதுமக்களை கேட்டு கொண்டார்.

இதற்கு முன்பாக பேருந்து ஓட்டுநர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார் பெறப்பட்டதாகவும் இந்த சோதனையின் போது போதைப்பொருள் எடுத்து பேருந்து செலுத்துவதாக 5 பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும் லொக்மான் ஜாமான் மேலும் அறிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு