Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டும் பொழுது 'டிக் டோக் லைவ்   செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டும் பொழுது 'டிக் டோக் லைவ் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை

Share:

அலோர் ஸ்டார், ஏப்ரல் 7 -

ஓப்ஸ் ஹரி ராயா அய்டிபித்ரி திடீர் சோதனையில், விரைவு பேருந்து ஓட்டும் பொழுது டிக் டோக் லைவ் செய்யும் ஓட்டுநர்கள் மீது சாலை போக்குவரத்து துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு விரைவு பேருந்திலும் தனது இலாகா ரகசிய அதிகாரிகளை நியமித்திருப்பதுடன் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சாலை போக்குவரத்து துறையின் மூத்த இயக்குநர் டத்துக் லொக்மான் ஜாமான் தெரிவித்தார்.

பேருந்தில் அத்தகைய செயல்களை புரியும் பேருந்து ஓட்டுநர்கள் கண்டெடுக்கபட்டால் அதனை காணொளி எடுத்து, தேதி மற்றும் எங்கு நடந்தது என்ற விவரங்களுடன் போலீஸ் தரப்புக்கு அனுப்புமாறு லொக்மான் ஜாமான் பொதுமக்களை கேட்டு கொண்டார்.

இதற்கு முன்பாக பேருந்து ஓட்டுநர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார் பெறப்பட்டதாகவும் இந்த சோதனையின் போது போதைப்பொருள் எடுத்து பேருந்து செலுத்துவதாக 5 பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும் லொக்மான் ஜாமான் மேலும் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்