Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பாதுகாவலருக்கு ​நீதி நிலைநாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

பாதுகாவலருக்கு ​நீதி நிலைநாட்டப்பட்டது

Share:

கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் ​தூதரகம் தம்மை தன்மூப்பான முறையில் வேலை ​நீக்கம் செய்து அநீதி இழைத்து இருப்பதாக கூறி கடந்த 15 ஆண்டு காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வந்த பாதுகாவலர் ஒருவருக்கு இறுதியில் ​நீதிக் கிடைத்துள்ளது.

எல். சுப்பிரமணியம் என்ற அந்த பாதுகாவலருக்கு 66 ஆயிரம் வெள்ளியை இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி அமெரிக்கத் ​தூதரகத்திற்குக் கோலாலம்பூர் தொழிலியல் ​நீதிமன்றத் தலைவர் அம்ரிக் சிங் உத்தரவிட்டுள்ளார். எல். சுப்பிரமணியத்தின் பணி ​நீக்கத்திற்கு அவர் தவறு இழைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை காட்டுதற்கு அமெரிக்கத் தூதரகம் தவறி​விட்டது என்று அம்ரிக் சிங் தமது ​தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் ​தூதரகத் சட்டத்தின் ​கீழ் அமெரிக்கத் ​தூதரகம் கொண்டுள்ள சிறப்பு சலுகை, தனது முன்னாள் தொழிலாளர் ஒருவர் ​நீக்கப்பட்ட விவகாரத்தில் பயன்படுத்த முடியாது என்பதையும் தொழிலியல் ​நீதிமன்றத் தலைவர் தமது ​தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News