கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தம்மை தன்மூப்பான முறையில் வேலை நீக்கம் செய்து அநீதி இழைத்து இருப்பதாக கூறி கடந்த 15 ஆண்டு காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வந்த பாதுகாவலர் ஒருவருக்கு இறுதியில் நீதிக் கிடைத்துள்ளது.
எல். சுப்பிரமணியம் என்ற அந்த பாதுகாவலருக்கு 66 ஆயிரம் வெள்ளியை இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி அமெரிக்கத் தூதரகத்திற்குக் கோலாலம்பூர் தொழிலியல் நீதிமன்றத் தலைவர் அம்ரிக் சிங் உத்தரவிட்டுள்ளார். எல். சுப்பிரமணியத்தின் பணி நீக்கத்திற்கு அவர் தவறு இழைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை காட்டுதற்கு அமெரிக்கத் தூதரகம் தவறிவிட்டது என்று அம்ரிக் சிங் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் தூதரகத் சட்டத்தின் கீழ் அமெரிக்கத் தூதரகம் கொண்டுள்ள சிறப்பு சலுகை, தனது முன்னாள் தொழிலாளர் ஒருவர் நீக்கப்பட்ட விவகாரத்தில் பயன்படுத்த முடியாது என்பதையும் தொழிலியல் நீதிமன்றத் தலைவர் தமது தீர்ப்பில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது


