May 22, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரை கைது செய்யும் நோக்கம் இப்போதைக்கு இல்லை
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரை கைது செய்யும் நோக்கம் இப்போதைக்கு இல்லை

Share:

சொத்துக்கள் அறிவிக்கும் விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை கைது செய்யும் நோக்கத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம், இப்போதைக்கு கொண்டிருக்கவில்லை என்று அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

துன் மகாதீருக்கு எதிரான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்ற காரணத்தினால், இப்போதைக்கு அவரை கைது செய்யும் நோக்கத்தை எஸ்.பி.ஆர்.எம் கொண்டிருக்கவில்லை என்று ஆசம் பாக்கி விளக்கினார்.

இன்று புத்ராஜெயாவில் 2024 முதல் 2028 ஆம் ஆண்டுக்கான தேசிய லஞ்ச ஒழிப்பு வியூக நடைமுறை திட்டத்தை தொடக்கி வைக்கப்பட்ட நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆசம் பாக்கி மேற்கண்டவாறு கூறினார்.

சொத்துக்கள் அறிவிக்கும் விவகாரத்தில் எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் நபர்களில் துன் மகாதீரும் ஒருவர் என்ற கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி ஆசம் பாக்கி அறிவித்தது தொடர்பில் அவரின் மேலும் விவரங்கள் கோரிய போது மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News