Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெ.67,000 லட்சம் பெற்றதற்காக அரசு பணியாளர் கைது
தற்போதைய செய்திகள்

வெ.67,000 லட்சம் பெற்றதற்காக அரசு பணியாளர் கைது

Share:

கெடா, மார்ச் 19-

கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிக்கு சான்றளிப்பு வழங்குவதற்காக 67,000 வெள்ளி தொகையை ஒரு நிறுவன மேலாளரிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் ஒருவரை பெர்லிஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

மேற்பார்வையாளராக பணியாற்றும் 50 வயதுடைய அவ்வாடவர் நேற்று மாலை 3 மணியளவில் பெர்லிஸ், SPRM அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து நீச்சல் குளம் பராமரிப்பு பணி மற்றும் இரசாயனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் மாதாந்திர முறையில் லட்சம் கேட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன.

கங்கார் பெர்லிஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ரிமாண்டில் வைப்பதற்கு விண்ணப்பித்ததை தொடர்ந்து, குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அவ்வாடவரை இன்று முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தடுப்பு காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் துவான் அகமாட் ஹமிடி முஸ்தாபார் தீர்ப்பளித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்