Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வெ.67,000 லட்சம் பெற்றதற்காக அரசு பணியாளர் கைது
தற்போதைய செய்திகள்

வெ.67,000 லட்சம் பெற்றதற்காக அரசு பணியாளர் கைது

Share:

கெடா, மார்ச் 19-

கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு நீச்சல் குளத்தின் பராமரிப்புப் பணிக்கு சான்றளிப்பு வழங்குவதற்காக 67,000 வெள்ளி தொகையை ஒரு நிறுவன மேலாளரிடம் லஞ்சம் கேட்ட அரசு ஊழியர் ஒருவரை பெர்லிஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

மேற்பார்வையாளராக பணியாற்றும் 50 வயதுடைய அவ்வாடவர் நேற்று மாலை 3 மணியளவில் பெர்லிஸ், SPRM அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து நீச்சல் குளம் பராமரிப்பு பணி மற்றும் இரசாயனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் மாதாந்திர முறையில் லட்சம் கேட்டதாக சாட்சியங்கள் கூறுகின்றன.

கங்கார் பெர்லிஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ரிமாண்டில் வைப்பதற்கு விண்ணப்பித்ததை தொடர்ந்து, குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அவ்வாடவரை இன்று முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தடுப்பு காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் துவான் அகமாட் ஹமிடி முஸ்தாபார் தீர்ப்பளித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை