Jul 17, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: சமூக ஊடகப் பயனர்களுக்குப் போலீஸ் கடும் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: சமூக ஊடகப் பயனர்களுக்குப் போலீஸ் கடும் எச்சரிக்கை

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலையொட்டி, சமூக ஊடகங்களில் அவதூறு, தூண்டுதல் மற்றும் பொய் செய்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலப் போலீஸ் தலைவர் அல்சாப்னி அகமது எச்சரித்துள்ளார்.

இனம், மதம், அரச குடும்பம் என்ற 3அர் மற்றும் தேர்தல் செயல்முறைகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பதிவிடுபவர்களைப் போலீஸ் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

பொது அமைதியை சீர்க்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது, குற்றவியல் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு-பல்ஊடகச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நினைறுத்தினார்.

பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என்றும், தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News