சிலாங்கூர், சுங்கை பூலோ, கம்போங் டேசா அமான் பகுதியில் அநஙறறு வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
மாலை 6.09 மணிக்குக் கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 6.25 மணிக்குச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சுமார் 15-க்கு 30 சதுர அடி பரப்பளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவினால், அங்குள்ள இரண்டு வீடுகளின் சமையலறைப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதிர்ஷ்வசடாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்துள்ளார்.









