Mar 18, 2026
Thisaigal NewsYouTube
5 லட்சம் வெள்ளியை பாதுகாப்பாக ஒப்படைத்தார்
தற்போதைய செய்திகள்

5 லட்சம் வெள்ளியை பாதுகாப்பாக ஒப்படைத்தார்

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

கடந்த புதன்கிழமை டாமன்சாராவில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் கார் நிறுத்தும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 5 லட்சம் வெள்ளி ரொக்கப்பணத்தை உள்ளடக்கிய பயணப்பெட்டி ஒன்றை பாதுகாப்பாக போலீசாரிடம் ஒப்படைத்த நேர்மையான பாதுகாவலர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறார்.

தம்மால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த பணத்தை உரியவரிடம் சேர்க்கப்பட வேண்டும் என்று அந்த பாதுகாவலர் எடுத்துக்கொண்ட முயற்சி மற்றும் உறுதிபாடு தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக அந்த செய்தியை படித்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேரங்காடி மையத்தை தொடர்பு கொண்ட போது, கருத்துரைக்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தை போலீசாரிடமே விட்டு விடுவதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையம் ஒரு புகாரை பெற்று இருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்துக் ஹூசேன் ஓமார் தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை