Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நஜீப்பிற்கு சிறையில் சிறப்பு சலுகை
தற்போதைய செய்திகள்

நஜீப்பிற்கு சிறையில் சிறப்பு சலுகை

Share:

கோலாலம்பூர், மார்ச் 28 -

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிய போதிலும் அதனை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை என்பதால் அது நம்ப முடியாத தகவலாகவே இருந்து வந்துள்ளது.

ஆனால், லஞ்ச ஊழல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நஜீப்பிற்கு உண்மையிலேயே வெகு சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் சொற்பொழிவாளர் வான் ஜி வான் ஹூசின் கூறுகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானுடன் தொடர்புபடுத்தப்பட்ட நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, தனது சிறைவாசத்தை முடித்து விட்டு கடந்த மார்ச் 22 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட வான் ஜி , முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதை நேரில் பார்த்தாக உள்ளூர் அகப்பக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மற்ற கைதிகளைப் போல் நஜீப், சிறைச்சாலை சீருடையை அணிவதில்லை. வீட்டில் உடுத்தும் ஆடையைதான் அணிந்து இருக்கிறார். அது கோர்ட் சூட் அல்ல. இயல்பான மனிதரைப் போல தனி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற விசாரணைகள் போன்றவற்றை தவிர மற்ற நேரங்களில் அவருக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக இடத்தில் நஜீப் உள்ளார்.

நஜிப்பிற்கு சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை. மிக மிகச் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை மற்ற கைதிகளுக்கு கிட்டாதவாகும். அனுதினமும் நஜீப்பை பார்ப்பேன், ஆனால், பேச முடியாது. எனது வழக்கறிஞர்கள் என்னை பார்ப்பதற்கு வரும் போது, பிரத்தியேக இடத்திற்கு செல்லும் போது நஜீப்பின் பார்ப்பது உண்டு என்று வான் ஜி தமது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை