Mar 20, 2026
Thisaigal NewsYouTube
இரு சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
தற்போதைய செய்திகள்

இரு சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து

Share:

மேரு, ஏப்ரல் 29-

சிலாங்கூர், தாமான் பெரின்டாஸ்துரியான் மேரு -வில் நிகழ்ந்த தீ விபத்தில் இரு சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எரிந்து சாம்பலாகின.

இன்று காலை 6.34 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, காப்பார், வடக்கு கிள்ளான், அன்டலாஸ் உட்பட மேலும் ஐந்து தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து 39 தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

சம்பவ இடத்தை வந்தடைந்த போது தீ வேகமாக மற்ற கட்டிடங்களிலும் பரவி இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அஹ்மத் முக்லிஸ் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

Related News