பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சிங்கப்பூரில் பணியாற்றும் ஜோகூர்வாசிகள் வாக்களிப்பதற்காகவே இன்று பூலாய் வந்து சேர்ந்தனர்.
பூலாய் தொகுதியில் காலையில் பல்வேறு பகுதிகளில் கடும் மழைய பெய்த போதிலும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்த வண்ணம் வரிசையில் காத்திருந்து வாக்களித்து விட்டு சென்றதை காண முடிந்தது.
சிங்கப்பூரில் எஃகு தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை செய்வதாக கூறும் 57 வயது சி. தமிழ் என்பவர், இன்று பிற்பகல் 2 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் காலையிலேயே வாக்களிக்கத் தொடங்கியதாக குறிப்பிட்டார்.
பூலாய் தொகுதியில் தாமான் புக்கிட் இண்டா வில் உள்ள இடைநிலைப்பள்ளியில் வாக்களித்த தமிழ், காலையில் கனத்த மழை பெய்யும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


