பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சிங்கப்பூரில் பணியாற்றும் ஜோகூர்வாசிகள் வாக்களிப்பதற்காகவே இன்று பூலாய் வந்து சேர்ந்தனர்.
பூலாய் தொகுதியில் காலையில் பல்வேறு பகுதிகளில் கடும் மழைய பெய்த போதிலும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்த வண்ணம் வரிசையில் காத்திருந்து வாக்களித்து விட்டு சென்றதை காண முடிந்தது.
சிங்கப்பூரில் எஃகு தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை செய்வதாக கூறும் 57 வயது சி. தமிழ் என்பவர், இன்று பிற்பகல் 2 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் காலையிலேயே வாக்களிக்கத் தொடங்கியதாக குறிப்பிட்டார்.
பூலாய் தொகுதியில் தாமான் புக்கிட் இண்டா வில் உள்ள இடைநிலைப்பள்ளியில் வாக்களித்த தமிழ், காலையில் கனத்த மழை பெய்யும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


