பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சிங்கப்பூரில் பணியாற்றும் ஜோகூர்வாசிகள் வாக்களிப்பதற்காகவே இன்று பூலாய் வந்து சேர்ந்தனர்.
பூலாய் தொகுதியில் காலையில் பல்வேறு பகுதிகளில் கடும் மழைய பெய்த போதிலும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்த வண்ணம் வரிசையில் காத்திருந்து வாக்களித்து விட்டு சென்றதை காண முடிந்தது.
சிங்கப்பூரில் எஃகு தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை செய்வதாக கூறும் 57 வயது சி. தமிழ் என்பவர், இன்று பிற்பகல் 2 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் காலையிலேயே வாக்களிக்கத் தொடங்கியதாக குறிப்பிட்டார்.
பூலாய் தொகுதியில் தாமான் புக்கிட் இண்டா வில் உள்ள இடைநிலைப்பள்ளியில் வாக்களித்த தமிழ், காலையில் கனத்த மழை பெய்யும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றார்.

Related News

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்


